
ஆஸி. அமைதி
ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து சேத விவாகரத்திற்கு முன்பு எந்த அணியுடன் ஆடினாலும் பிரச்சனை செய்யாமல் இருக்க மாட்டார்கள். ஆனால், ஸ்மித், வார்னர் தடைக்கு பின்னர் அமைதியை கடைபிடித்து வருகிறது அந்த அணி. அதே சமயம், கோலி ஆஸ்திரேலிய அணியுடன் ஆடினாலே ஏதாவது சீண்டலில் ஈடுபடுவார்.

கோலி சீண்டல்
நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் டெஸ்ட் போட்டியில் அமைதியாக இருந்தார் கோலி. ஆனால், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்-ஐ தேவையில்லாமல் சீண்டினார். அது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

முன்னாள் வீரர்கள் விமர்சனம்
இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் இது தவறு என கூறினார். இது மற்ற இந்திய வீரர்களை பாதிக்கும் எனவே கோலி இதை நிறுத்த வேண்டும் என கூறினார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் "கோலி ஸில்லியாக நடந்து கொள்கிறார்" என கூறினார்.

அக்தர் ஜால்ரா
ஆனால், முன்னாள் பாகிஸ்தான் அக்தர், ஆஸ்திரேலியா சென்றால் இதெல்லாம் சகஜம். கோலி போன்ற பெரிய வீரரிடம், இதெயெல்லாம் பெரிதாக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். இது கோலிக்கு ஜால்ரா அடிப்பது போல தான் இருக்கிறது. அக்தர் போட்ட பதிவு இதுதான்.
அக்தர் போட்ட பதிவு
"கோலி தற்காலத்தில் இந்த விளையாட்டின் சிறந்த வீரர். போட்டி மிகுந்த கிரிக்கெட்டில் எல்லை மீறாத வரை ஆக்ரோஷம் ஒரு அங்கம். அதிலும், ஆஸ்திரேலியாவில் ஆடினால் இது சகஜம். கோலி செய்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என பதிவிட்டுள்ளார் அக்தர்.


Click it and Unblock the Notifications
