
ரவி சாஸ்திரி மீது புகார்
அவரது இந்த யோசனை தற்போது புகைச்சலை கிளப்பி இருக்கிறது. ரவி சாஸ்திரி கருத்துக்கு கோலியும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால்... சாஸ்திரியின் இந்த யோசனைக்கு சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகர்க்கர்.

32 சதம்
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:எண்கள் என்ன கூறுகின்றன என்பதை சிந்தியுங்கள், விராட் கோலி 32 சதங்களை 3ம் நிலை ஆட்டக்காரராக களத்தில் இறங்கி எடுத்துள்ளார். 4ம் நிலையில் கோலி 1744 ரன்களை 58 ரன்கள் என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார்.

4ம் நிலை ஆட்டம்
4ம் நிலையிலும் நன்றாக விளையாடி இருக்கிறார். ஆனால் 4ம் நிலையில் கோலி இறங்கக் கூடாது. ஒரு பேட்ஸ்மென் தன் வாழ்நாளின் சாதனைகளையெல்லாம் ஒன்டவுனில் இறங்கி செய்துள்ளார், அவரது மகத்துவமே இந்த டவுனில்தான் வந்துள்ளது.

முட்டாள்தனமானது
ஆகவே இவரைப்போய் இன்னும் கீழே இறங்கச் சொல்வது சரியல்ல.. 4ம் நிலையிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் ஏற்கெனவே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் அவரை அந்த நிலையில் இருந்து இன்னும் கீழே இறக்குவது முட்டாள்தனம்.

கவலை
முதல் 3 வீரர்களின் ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிகளைப் பெரும்பாலும் தீர்மானித்துள்ளது. அணியின் மிடில் ஆர்டர்தான் கவலை அளிக்கிறது என்று அஜித் அகர்க்கர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications