என்ன நடந்தது?
ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம்-ஐ ரன் அவுட் செய்தார் தோனி. ஜேம்ஸ் நீஷம் பந்தை அடிக்க முற்பட்ட போது பந்து காலில் பட்டது. அதற்கு எல்.பி.டபுள்யூ அவுட் கேட்டனர் இந்திய வீரர்கள்.
எளிய ரன் அவுட்
அப்போது பந்து தோனி அருகே இருப்பதை பார்க்காத ஜேம்ஸ் நீஷம் ரன் ஓட முற்பட, தோனி அவரை எளிதாக ரன் அவுட் செய்தார். இதை கண்ட ரசிகர்கள் தோனி இருக்கும் போது ரன் ஓடக் கூடாது என நீஷம்-ஐ கிண்டல் செய்து வந்தார்கள்.
ஐசிசி எச்சரிக்கை
ஐசிசி தற்போது தோனி பின்னே இருக்கும் போது கிரீஸ் கோட்டை தாண்டாதீர்கள் என எச்சரிக்கை விடுத்து ட்வீட் போட்டுள்ளது. இதையும் தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
|
ஜேம்ஸ் நீஷம் நன்றி
இதில் சம்பந்தப்பட்ட நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் தனக்கு வரும் அறிவுரைகளை பார்த்து, அதற்கு நன்றி கூறி இனிமேல் பந்து எங்கே இருக்கிறது என பார்த்து ரன் ஓடுகிறேன் என கூறியுள்ளார்.
|
அடுத்து டி20 தொடர்
நியூசிலாந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரில் கோலி இடம் பெறாத நிலையில், ரோஹித் அணிக்கு தலைமை ஏற்க உள்ளார். தோனியும் டி20 தொடரில் பங்கேற்கிறார்.