மும்பை : சில நாட்கள் முன்பு, பிசிசிஐ 2018-19 சீசனுக்கான, உள்ளூர் தொடர்கள் அட்டவணையை வெளியிட்டது. மொத்தம் 37 அணிகளுக்கான, இந்தப் பட்டியலில் ஆண்கள், பெண்கள் என்ற பிரிவுகளில் சுமார் 2000 போட்டிகள் இடம் பெற்றுள்ளது. இதில் பல புதிய அணிகளுக்கு, மைதானங்கள், பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த தேவையான பணம், என பல வசதிகள் இல்லை. இதனால், உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பதில் தெரியாத பல கேள்விகளோடு இருக்கிறார்கள்.
இந்திய முதல் தர கிரிக்கெட்டை பொறுத்தவரை, ரஞ்சி ட்ராபி மிகவும் முக்கியமான ஒரு தொடர். தற்போது சென்ற ஆண்டை விட கூடுதலாக பத்து அணிகள், இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். இதில் பெரும்பாலான அணிகள், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவை.