|
அந்த காலத்திய உடைகள்
முதல் உலகப் போர் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் வீரர்கள் உடை அணிந்து வந்தனர். குறிப்பாக இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய ராணுவ பிரிவு போல உடை அணிந்து வந்த நபர்கள், ராயல் மான்செஸ்டர் படைப்பிரிவோடு மோதினர்.
|
மற்றொரு போட்டி
மற்றொரு நிகழ்ச்சியாக ராயல் பிரிட்டிஷ் பிரிவும், சர்ரே பிரிவும் கிரிக்கெட் போட்டியில் மோதின. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் சிலரும், இந்தியர்கள் சிலரும் முதல் உலகப் போர் உடைகளை அணிந்து வந்து இந்த போட்டியில் பங்கேற்றனர்.
|
காதி உடைகள்
மேலும் இந்த ஆண்டு, இந்தியாவின் முதல் உலகப்போர் பங்களிப்பை நினைவுபடுத்தும் வகையில் காதி உடைகளை இங்கிலாந்தில் வசிக்கும் பிரிட்டிஷ் இந்திய குடும்பத்தினரிடம் விநியோகிக்க உள்ளனர்.
|
இந்தியர்கள் பங்களிப்பு என்ன?
முதல் உலகப் போரில் இந்தியா சார்பாக பல லட்சம் வீரர்கள் இங்கிலாந்துக்காக போரிட்டுள்ளனர். அதில் 62000 வீரர்கள் இறந்துள்ளனர். 67000 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.