கொரோனா
இந்நிலையில், அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் சாம் கெண்ட்ரிக்ஸ் கொரோனா காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியுள்ளார். அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் இதனை உறுதி செய்துள்ளது. அதாவது, இன்று (ஜுலை.29) கொரோனா பாதிப்பு காரணமாக, கெண்ட்ரிக்ஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
மீண்டும் கோவிட்
கெண்ட்ரிக்ஸ் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், அர்ஜெண்டினா போல் வால்ட் வீரர் ஜெர்மன் சியாராவிக்லியோ என்பவரும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
பெரும் சறுக்கல்
அமெரிக்க வீரர் கெண்ட்ரிக்ஸ் கடந்த 2017 மற்றும் 2019ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக அவர் வெளியேறி இருப்பது நிச்சயம் அமெரிக்காவின் தங்க வேட்டைக்கு பெரும் சறுக்கலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தீவிர நடவடிக்கை
ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், போட்டியளார்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இதனால், ஒவ்வொரு நாடுகளின் நிர்வாகமும் தங்கள் வீரர்களை பாதுகாப்பதில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.