|
வீரர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்
ஆகாஷ் சோப்ரா தன் பதிவில், "ஆடுகளத்தின் மையத்திற்கு பல ரசிகர்கள் சென்று விடுகிறார்கள். தயவுசெய்து வீரர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்" என கூறி இருக்கிறார்.
ரசிகர்கள் தொந்தரவு
குறிப்பாக கடந்த நாட்களில், தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் எகிறி குதித்து ஓடி வந்தனர். அதிலும் சர்வதேச போட்டியில் இப்படி நடைபெறுவது சற்று அதிகப்படியான விஷயம் தான். ஆனால், சில ரசிகர்கள் இதற்கு மாறாகவும் கூறுகின்றனர்.
|
ஸ்பெஷல்-லாம் இல்லை
"அவர்களும் நம்மளை மாதிரிதான்.. ஒண்ணும் பெருசா ஸ்பெஷல்-லாம் இல்லை" என கூறி இருக்கிறார் இந்த ரசிகர்.
|
நீங்க என்ன கடவுளா?
"எப்படி ஒரு வீரர் ரசிகரிடம் இருந்து பாதுகாப்பில்லாமல் இருக்க முடியும்? நீங்கள் என்ன உங்கள் உலகத்தில் கடவுளாக இருக்கிறீர்களா?" என நச்சென்று மூக்கறுப்பது போல கேட்டுள்ளார் இந்த நபர்.
|
ஆயுதமா இருக்கு?
"கால்பந்தில் இது போல் அடிக்கடி நடக்கும். இது ஒன்றும் கையில் ஆயுதத்தை தூக்கிக் கொண்டு வருவது போன்ற விஷயமில்லை. உங்கள் வீரர்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். இது ஆட்டத்தின் போக்கை பாதிக்கும் என்பதற்காக இது நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என ஆகாஷ் சோப்ராவுக்கு விளக்கம் அளித்துள்ளார் இவர்.