இந்தியாவின் திட்டம்
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை எடுத்துக்கொண்டால் இந்திய அணியில் ரோகித், விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல், ஹர்திக் தலைமையில் புதிய படை உருவாகியுள்ளது. ஒருபுறம் சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், உம்ரான் மாலிக் என இளம் வீரர்கள், மற்றொருபுறம் பாண்ட்யா, கே.எல்.ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் என புதுப்பொழிவு பெறவுள்ளது.
பிரட் லீ பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார். அதில், சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது. 12 - 15 மாதங்களுக்குள் அவர் காட்டிய ஆட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதுவும் ஆஸ்திரேலிய போன்ற கடினமான களத்தில் அவர் எந்தவித பயமும் இல்லாமல் ஷாட்களை தேர்வு செய்த விதம் கிராண்ட் மாஸ்டர் போல இருந்தது.
ஒரே ஒரு அட்வைஸ்
கடினமான ஷாட்களை ஆடும் போதும், சூர்யகுமார் யாதவின் முகத்தில் பதற்றம் இல்லாமல் சிரிப்பு மட்டுமே இருக்கும். அது விலைமதிப்பற்றது. அவர் இந்தியாவுக்காக அதிக ரன்களை அடிப்பவர் மட்டுமல்ல, கோப்பையையும் வென்றுக்கொடுப்பவராக வருவார். அவருக்கு நான் கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால், எந்த அட்வைஸையும் கேட்காதீர்கள். தற்போது போகும் வழியிலேயே சிறப்பாக செல்லுங்கள் என பிரட் லீ குறிப்பிட்டுள்ளார்.
டிராவிட்டிற்கு கோரிக்கை
தொடர்ந்து பேசிய அவர், சூர்யகுமாரின் அடிப்படை முதலில் சிறப்பாக உள்ளதால் தான் இதுபோன்ற ஷாட்களை ஆட முடிகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சூர்யகுமாரை நம்பி, அவரின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அப்போது தான் சிறப்பாக இருப்பார் என பிரட் லீ பேசியுள்ளார்.