ப்ளேஸ்டேஷனில் ஆடுகிறார்கள்
"ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்த போட்டியின் தலைவர்கள். அவர்கள் இருவரும் பேட்டிங் செய்வதை பார்த்தால் ப்ளேஸ்டேஷனில் (PS4) அவர்கள் விளையாடுவதை போலவே இருக்கிறது" என கூறி உள்ளார் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல்.
எளிதாக ரன் குவித்த கோலி, ரோஹித்
ரோஹித் சர்மா, கோலி இருவரும் எந்த தடுமாற்றமும் இன்றி எளிதாக ரன் குவித்தனர். முதலில் கோலி அதிரடியாக ஆடி சதம் அடிக்க, ரோஹித் முதலில் நிதான ஆட்டம் ஆடி பின்னர் அதிரடிக்கு மாறினார். வீடியோ கேம்களில் தான் இப்படி ஆட்டமிழக்காமல் ரன் குவிக்க முடியும் என்பதை தான் சாஹல் சுட்டிக் காட்டுகிறார்.
சாஹல் நல்ல பந்துவீச்சு
இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்தார். ஷமி, ஜடேஜா ஆகியோர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில், சாஹல் கட்டுக்கோப்பாக பந்து வீசி தன் 10 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
சாதனை செய்த ரோஹித்
முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 152 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 150 ரன்களை தாண்டி ரன் குவிப்பது ஆறாவது முறையாகும். ஒருநாள் போட்டிகளில் சச்சின் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் 5 முறை 150 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து உள்ளனர். இந்த சாதனையை முறியடித்தார் ரோஹித்.