
2 முக்கிய காரணங்கள்
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியா தோற்றதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் 10 ஓவர் மற்றும் கடைசி 5 ஓவர்கள் தான்.

சொதப்பிய பவர் பிளே
338 ரன்கள் என்பது கடின இலக்கு. அந்த இலக்கை நோக்கி முன்னேறும் போது, பவர் பிளேவில் எடுத்தது வெறும் 28 ரன்கள். இது போதவே போதாது. கோலி, ரோகித் ஜோடி இன்னும் கொஞ்சம் அதிரடியாக அடித்து விளையாடி இருக்க வேண்டும்.

சிங்கிள் ரன்கள்
அதேபோல், ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் தேவை என்று இருந்தது. அப்போதும் கூட ஆட்டத்தின் சூழ்நிலையை பற்றி உணர்ந்து கொள்ளாமல், தோனி, கேதர் ஜாதவ் ஜோடி சிங்கிள் ரன்களில் தான் அதிக கவனம் செலுத்தினர். இவர்களின் பேட்டிங் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஆச்சரியமாக உள்ளது
டெத் ஓவர்களில் சிங்கிள் எடுத்திருக்கின்றனர். என்ன சொல்வது? 5 விக்கெட்டுகளை கையில் உள்ளன. 338 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஒவர்களில் அடித்து ஆடி ஜெயிக்க முடியவில்லை என்பது ஆச்சர்யம் தருகிறது. பவுலிங் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

டொக் பந்துகள்
அதை பவுண்டரிக்கு விரட்டி, ரன்களை ஸ்கோர்போர்டில் வரும் வழியை தான் பார்க்க வேண்டும். பெரிய இலக்கை விரட்ட வேண்டிய தருணத்தில், டாட் பந்துகள். அவர்களின் ஆட்டத்தை பற்றி எப்படி விமர்சிப்பது என்றே எனக்கு தெரிய வில்லை என்றார்.


Click it and Unblock the Notifications