பெண் ரசிகை
இந்நிலையில் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற சம்பவம்... தோனி உள்பட பலரையும் திணறடித்தது. அந்த போட்டியில் தோனியின் பெண் ரசிகை ஒருவரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேனருடன் ரசிகை
அந்த ரசிகை போட்டியை காண மைதானத்துக்கு வந்திருந்தார். கையில் ஒரு பேனர் ஒன்றையும் வைத்திருந்தார். அதில் அவர் எழுதி வைத்திருந்த வாசகங்கள் தான் டாப்கிளாஸ்.
பேனர் வாசகங்கள்
மைதானத்தில் இருந்த அனைவரின் பார்வையே அந்த பேனர் மீது தான் பதிந்திருந்தது. அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் தான் இந்த பரபரப்புக்கு முக்கிய காரணம். அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் இவை தான்.
மகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்
என்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா தோனி ? நான் ஸிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று அந்த பேனரில் எழுதி வைத்திருந்தார்.
வைரல் புகைப்படம்
போட்டியை காண மைதானம் வந்திருந்த அந்த ரசிகையின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி ரசிகையான அவர் மைதானத்தில் இந்த பேனரை வைத்தே போட்டியை ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.