டாஸ் வென்றது
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தது முதல் பெரிய குழப்பம். யார் அவரை பீல்டிங்கைத் தேர்வு செய்யச் சொன்னது என்று தெரியவில்லை. நிச்சயம் கும்ப்ளே இந்த யோசனையைத் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை.
338 ரன்கள்
இந்தியாவின் சொதப்பல் பந்து வீச்சைப் பயன்படுத்தி பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை அடித்தது. இதைத் தொடர்ந்து 339 இலக்குகளுடன் களமிறங்கிய இந்திய அணி 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
பீல்டிங் மிகத் தவறு
டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்திருக்க வேண்டும். சரி ஏதோ தவறான முடிவு எடுத்து விட்டது. சரி, பீல்டிங்காவது ஒழுங்காக செய்தார்களா என்றால் இல்லை. எத்தனை நோ பால்கள், வைட் பால்கள்.. !
கோஹ்லி - கும்ப்ளே கலாட்டா
இத்தொடரின் ஆரம்பத்திலேயே கோஹ்லி, கும்ப்ளே மோதல் தொடங்க விட்டது. கும்ப்ளே பேச்சை, ஆலோசனையை கோஹ்லி கேட்பதில்லை என்றும் பேச்சு அடிபட்டது. அது உண்மையாக இருக்குமோ என்று இன்று நடந்த சம்பவங்கள் யோசிக்க வைத்து விட்டன.
பழம் நழுவி
பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயிலும் விழுந்தது போல் டாஸில் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தானே பேட்டிங் செய்து, அது வெல்லவும் ஈஸியாக விட்டு விட்டது இந்தியா.
ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.