இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா
முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. இதனால், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இரண்டாவது டி20 போட்டியை சந்தித்தது.
19வது ஓவரில் மழை பெய்தது
ஆஸ்திரேலிய அணி இன்னிங்க்ஸின் 19வது ஓவரில் மழை பெய்யத் துவங்கியது. அப்போது இரண்டு பந்துகள் வீசிய நிலையில் மழை அதிகமாக பெய்தது. எனினும், அம்பயர்கள் தொடர்ந்து பந்து வீசுமாறு கூறினார்.
கோலி கோபம் அடைந்தார்
மூன்றாவது பந்தை வீசி முடித்த பின்னரும் அம்பயர் பந்து வீசுமாறு கூற கோலி கோபமடைந்தார். அம்பயரிடம் கோபமாக ஏதோ கூறி விட்டு சென்றார். அதன் பின் 19வது ஓவர் முடியும் வரை இந்தியா மழையில் பந்து வீசியது. அதன் பின்னரே அம்பயர்கள் போட்டியை நிறுத்தினர்.
நியாயம் தான்
கோலியின் கோபம் நியாயமானது தான் என வர்ணனை அறையில் இருந்த ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார். இது போல மழையில் பந்து வீசும் போது பீல்டிங் செய்வது மிக கடினம். பீல்டிங் செய்ய ஓடும் போது வழுக்கி விழ அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும், அதிக ஈரத்தால் பந்துவீச்சாளர் பந்தை சரியாக கட்டுப்படுத்த முடியாது.