அதிர்ஷ்டசாலி
நான் முதன்முதலில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 ஆகிய போட்டிகளில் ஆடியபோது அந்த அணிகளின் கேப்டன் டோணியாக இருந்ததால் நான் அதிர்ஷ்டசாலி ஆவேன்.
கோபம்
அவர் நான் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்வார். தவறுகள் பற்றி எப்பொழுதும் எதுவும் கூற மாட்டார்.
டோணி
டோணிக்கு கோபமே வராது. அவர் மிகவும் அமைதியாக பேசுவார். ஒரு பந்துவீச்சாளருக்கு கேப்டனின் ஆதரவு இருப்பது நல்லது. அது தான் எனது மிகப்பெரிய பிளஸ் ஆகும்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை போட்டிகள் உள்ளூர் போட்டிகளை விட சிறந்ததாக உள்ளது. இந்த போட்டிகளில் விளையாடுவது எனக்கு நிறைய நம்பிக்கை அளித்துள்ளது.
வெற்றி
இந்தியாவில் உள்ள அனைவரும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் வெற்றியை மனதில் வைத்து தான் விளையாடுகிறோம்.