சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று முகமது கையிப் கூறியுள்ளார். நடப்பு சீசனில் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குஜராத் அணி 18 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதனால் கடைசி போட்டியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே விளையாடினால், மீண்டும் தோனியை பார்க்க சென்னை ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால் தற்போது தோனிக்கு 41 வயது ஆகிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது கஷ்டம் தான்.
இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது கையிப், ஐ பி எல் கிரிக்கெட்டில் இதுதான் தோனிக்கு கடைசி ஆண்டு என்று கூறினார். இது தொடர்பாக பேசிய அவர் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இதுதான் கடைசி சீசன் என்று தோனி பல சான்றுகளை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டார் என்பதை சுட்டிக்காட்டிய கெயிப், தோனி எப்போதுமே தன்னுடைய எந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ரசிகர்களை யூகிக்க வைப்பார் என்று கூறினார். அதுதான் தோனியின் குணமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது 7வது லீக் ஆட்டத்தை விளையாடிவிட்டது. இதனால் ரசிகர்களுக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி நன்றி தெரிவித்துக் கொண்டனர். தோனியும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.