ஜோஸ் பட்லர் தடுமாற்றம்
துவக்க வீரர் ஜோஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களில் தட்டுத் தடுமாறி பேட்டிங் செய்தார். பட்லர் 34 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 2வது ஓவரில் இருந்து 20வது ஓவர் வரை களத்தில் இருந்தார். அவர் துவக்கத்திலும் நிதானமாக ஆடி விட்டு, கடைசி நேரத்திலும் அதிரடியாக ஆட முடியாமல் தவித்தார்.
பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றம்
ஸ்மித் அரைசதம் கடந்து 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் அதிர்ச்சி அளித்தார்.
நிதானம்
கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் என்ன சிறப்பாக பந்துவீசி இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்கள் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்றோர் நிதானம் காட்டியது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.
பஞ்சாப் சொதப்பல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் ராகுல், சர்ப்ராஸ் கான் அரைசதம் அடித்து நீண்ட நேரம் களத்தில் இருத்தும் அதிரடியாக ஆடாமல், தங்கள் அணியை தோல்வி அடையச் செய்தனர்.
பிட்ச்சில் தவறு இல்லை
அதே போன்று ஸ்டீவ் ஸ்மித், பட்லர், பென் ஸ்டோக்ஸ் நிதான பேட்டிங் செய்தே ராஜஸ்தான் அணியை தோல்வி அடையச் செய்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் கொல்கத்தா அணி 14 ஓவர்களில் வெற்றி இலக்கான 140 ரன்களை தாண்டியது. அப்படி என்றால், பிட்ச்சில் எந்த தவறும் இல்லை.
ரசிகர்கள் எரிச்சல்
2019 ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், ராகுல், சர்ப்ராஸ் கான் போன்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக பேட்டிங் செய்து, அரைசதம் அடித்து தங்கள் அணியை கவிழ்த்து வரும் போக்கை கண்டு, "எதுக்கு டி20 மேட்ச் பார்க்குறோம்னே தெரியலையே?" என ரசிகர்கள் எரிச்சலடைந்து உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் துவக்கம் முதல் கடைசி வரை அதிரடியாக ஆடி வரும் ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே. அதனால் இந்த சீசனில் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதும் உண்மை.