கிரிக்கெட் உலகை உலுக்கிய சம்பவம்
கடந்த 2000மாவது ஆண்டில் கிரிக்கெட் உலகை உலுக்கிய மேட்ச் பிக்ஸிங் சம்பவம் இது தான். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் ஹன்சி குரோனியே மீது மேட்ச் பிக்ஸிங் செய்ததாக புகார் எழுந்தது.
குற்றத்தை ஒப்புக் கொண்டார்
அதை பலரும் நம்ப மறுத்த நிலையில், அவரே முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்ய தான் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். அது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஞ்சீவ் சாவ்லா கைது
அதில் சம்பந்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த புக்கி சஞ்சீவ் சாவ்லா இங்கிலாந்தில் வசித்து வந்தார். அவரை 2016இல் இங்கிலாந்து அரசு கைது செய்தது. அவர் 1996 முதல் அங்கே தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வரலாம்
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டி கோரிக்கை விடுத்தது இந்திய அரசு. இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவால், விரைவில் அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என தெரிகிறது.
உண்மை வெளி வருமா?
ஹன்சி குரோனியே கடந்த 2002இல் விமான விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், சுமார் 16 வருடங்கள் கழித்து இந்தியா இந்த மேட்ச் பிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரணை செய்ய உள்ளது. இப்பயாவது என்ன நடந்ததுனு சொல்வாங்களா?