கண்மூடித்தனமானது
அதைப்போலவே சரியாக செயல்படாத கேப்டன் கோலியின் கேப்டன் ஷிப்பை அவர்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் கேப்டன் பதவியை ஆலோசிக்காமல் கோலிக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ளனர். இது தேர்வுக் குழு விருப்பமா அல்லது கோலியின் தனிப்பட்ட விருப்பமா ? என்று கேள்வி எனக்கும் எழுகிறது.
புதிய தேர்வுக்குழு
தேர்வுக்குழுவின் கடைசி அணி தெரிவு இதுவாக இருக்கும். ஏனென்றால் விரைவில் இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். இனிமேல் அமைக்கும் குழுவானது அணிக்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
கருத்து புறக்கணிப்பு
அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கவாஸ்கர் கருத்தை ஏற்கமுடியாது, மரியாதையுடன் அவரது கருத்தை புறக்கணிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியதாவது: பார்வையாளர்கள்.
தேவை இல்லை
அணி தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து தேர்வாளர்களுமே அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். சர்வதேச போட்டிகளை தவிர்த்து நாங்கள் 477 விளையாடி உள்ளோம். இதைவிட பெரிய அனுபவம் வேறு தேவை இல்லை.
7 டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து அணி சேர்மன் ஸ்மித் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலிய தலைமை தேர்வாளர் ஹோன்ஸ் ஏழு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே பங்கேற்றவர். ஆனால் 128 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்க் வாக் அவருக்கு கீழ் தான் பணிபுரிகிறார்.
ஒன்றும் நடக்காது
எனவே நான் கவாஸ்கரின் உணர்வை மதிக்கிறோம். அவரது கருத்துகளை வரவேற்கிறோம். அதே சமயம் புண்படுத்தும்படி வரும் கருத்துக்கள் எங்கள் குழுவை பலப்படுத்துமே தவிர வேறு ஒன்றும் நடக்காது. இதன் மூலம் எங்களின் ஒற்றுமை தான் அதிகரிக்கும் என்று கூறினார்.