
பெங்களுரூ: 6 பால்களில் 6 சிக்சர்களை லெப்டிலேயே அடித்து நொறுக்கியவர், ஒருதின ஸ்பெஷலிஸ்ட், பஞ்சாப் யுவராஜா என்றெல்லாம் பெயர் பெற்றவர் யுவராஜ் சிங். ஆனால், ஐபிஎல்லில் அவருடைய நிலைமை தலைப்பை போல் மாறிவிட்டது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமை யுவராஜ் சிங்குக்கு உண்டு. 2015ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவராஜ். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
