
எப்படி வென்றது?
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நீண்ட நேரமாக இரு அணிகளுமே கோல் அடிக்காமல் சமநிலையுடன் இருந்தன. ஆனால் ஆட்டத்தின் 2வது பாதியில் மொராக்கோ அணி வீரர் ரோமெய்ன் சாஸ் 73வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்பின் கூடுதல் நேரத்தில் மொராக்கோ வீரர் அக்ராஃப் மேலும் ஒரு கோலை அடித்து அசத்தினார்.

கலவரம் வெடிப்பு
இந்நிலையில் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத பெல்ஜியம் ரசிகர்கள் ஆத்திரத்தில் எல்லைமீறி சென்றுள்ளனர். பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கார் மற்றும் பைக்குகளை சேதப்படுத்தியும், தீ வைத்து கொளுத்தியும், கடைகளை அடித்து நொறுக்கியும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

காய பாதிப்பு
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டினர். இந்த கலவரத்தில் போலீசார்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபுறம் அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்துக்கொண்டிருக்க, மற்றொரு புறம் இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வல்லுநர்களின் கோரிக்கை
இந்த முறை ஃபிஃபா உலகக்கோப்பையில் அசுர பலத்தில் இருந்த அணிகளை, யாருமே எதிர்பார்க்காத வகையில் கத்துக்குட்டி அணிகள் பந்தாடி வருகின்றன. இதனை ஒரு நல்ல விஷயமாக பார்க்க வேண்டுமே தவிர, அந்த சிறு அணிகள் மீது கோபத்தை காட்டக்கூடாது என கால்பந்து வல்லுநர்கள் அறிவுரைக்கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

