
458 ரன்கள் வெல்ல இலக்கு
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி அபாரமாக 421 ரன்களைக் குவித்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி வெல்ல 458 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நல்ல தொடக்கம்
பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஸ்மித், பீட்டர்சன் ஜோடி தொடக்கம் முதல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த 10 இன்னிங்சில் ஒரு முறை கூட 27 ரன்களை தாண்டாத பீட்டர்சன், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

138/2
4வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டு இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று கடைசி நாள்..
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி எளிதான வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதுதான்.. ஆனால் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், போட்டியை தென்னாப்பிரிக்கா டிரா செய்யவும் வாய்ப்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications