அசத்திய கோஹ்லி- ரோகித்
கோஹ்லி 131 ரன்கள்; ரோகித் சர்மா 104 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி இணைந்து 219 ரன்களை அள்ளியது. இதனைத் தொடர்ந்து களத்துக்கு வந்த பாண்ட்யா, ராகுல் நிலைத்து நிற்கவில்லை.
1 ரன்னில் அரைசதம் மிஸ்
பின் டோணி 49 ரன்கள் எடுத்திருந்தார். 300-வது போட்டியில் 1 ரன்னில் டோணி அரை சதத்தை தவறிவிட்டார். மணீஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்களை குவித்தது.
376 ரன்கள் இலக்கு
376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் 42.4 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி பறிகொடுத்து பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் மேத்யூஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார்.
நேரடி தகுதி இல்லை
இந்த பரிதாப தோல்வியின் மூலம் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடி தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை தேர்வு குழு ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.