முதல் நாளில் இரு போட்டிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 14ம்தேதி தொடங்குகிறது. முதல் நாளில் இரு போட்டிகள் நடக்கின்றன. இலங்கை-நியூசிலாந்து அணிகள் சர்ச்பார்க் ஸ்டேடியத்திலும், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்போர்னிலும் மோத உள்ளன.
அரங்கு நிரம்பிய காட்சி
இதில் நியூசிலாந்து-இலங்கை போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகிவிட்டன. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோத உள்ள மெல்போர்ன் மைதானத்தின் மொத்த இருக்கைகள் 90ஆயிரமாகும். அதில் சில டிக்கெட்டுகள் மட்டுமே இன்னும் விற்பனையாகவில்லை.
இந்தியா-பாகிஸ்தான்
15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் ஹாமில்டனில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. 10 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தில், 7 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அன்றைய தினம் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான முழு டிக்கெட்டும் விற்பனையாகிவிட்டது.
எட்டேகால் லட்சம் டிக்கெட்டுகள்.. அடேங்கப்பா..
இதுவரை 825,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள போதிலும், இன்னமும் பல போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை என்பதால், அதை ரசிகர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது.