பிசிசிஐ முட்டுக்கட்டை ஏன்?
ஐசிசி கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்க எடுக்கும் முயற்சிக்கு இப்போது இருக்கும் ஒரே தடை பிசிசிஐ தான் என தெரிய வந்துள்ளது. இது பற்றி ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் பேசியுள்ளார். பிசிசிஐ ஏன் மறுக்கிறது என்பது பற்றி கூறியுள்ளார்
இந்திய அரசு தலையீடு வேண்டாம்
ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட் இணைந்தால் உலக போதை தடுப்பு நிறுவனம் மற்றும் தேசிய போதை தடுப்பு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டும். இது இந்திய அரசின் தலையீட்டை கிரிக்கெட்டில் கொண்டு வந்துவிடும் என நினைக்கிறது பிசிசிஐ.
முயற்சி செய்கிறோம்
அதன் காரணமாகவே பிசிசிஐ ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட்டை இணைக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ-ஐ ஒப்புக் கொள்ள வைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என டேவிட் கூறினார்.
பிசிசிஐ இறங்கி வருமா?
கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்ந்தால் இந்த விளையாட்டு பல புதிய ரசிகர்களை பெறும். மேலும், பல நாடுகளில் இந்த விளையாட்டு வளரும் எனவும் கூறினார் டேவிட். இதை மனதில் வைத்து இந்தியா கீழே இறங்கி வர வேண்டும் எனவும் கூறினார். வரும் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது.