
புனேவுக்கு ரசிகர்கள் ஆதரவு
இடையில் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட்டபோது, ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிக்காக டோணி விளையாடினார். அந்த ஒரு காரணத்துக்காகவே, அந்த அணிக்கு தமிழகத்தில் இருந்த ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

போட்டிகள் மாற்றம்
இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் சிஎஸ்கே விளையாடும் ஆட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரி போராட்டம் காரணமாக போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

விசில்போடு எக்ஸ்பிரஸ்
ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத சிஎஸ்கே நிர்வாகம், சென்னையில் இருந்து ரசிகர்களை புனேவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட, விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயில் புனேவை இன்று அடைந்துள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து, உணவு, தண்ணீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

குவாட்டர், பிரியாணி கூட்டமல்ல
ஆனால், இது கூட்டங்களுக்கு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து அழைத்து செல்லப்பட்ட கூட்டம் இல்லை. இது தானாக சேர்ந்த கூட்டம். சிஎஸ்கே போட்டியை பார்ப்பதற்காக சேர்ந்தவர்கள்.


Click it and Unblock the Notifications
