கலக்கல் வீரர்கள்
சென்னை அணியின் பந்துவீச்சில் மூன்று போட்டிகளிலும் கலக்கிய வீரர்கள் இம்ரான் தாஹிர் மற்றும் தீபக் சாஹர். இருவரும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களது ஓவர் ரன் விகிதம் - இம்ரான் தாஹிர் - 5.20, தீபக் சாஹர் 4.66.
அதிக விக்கெட்கள்
மேலும், இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் மூன்று போட்டிகளில் 6 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
அதிக டாட் பால்
அதே போல, தீபக் சாஹர் அதிக டாட் பால் வீசியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 3 ஐபிஎல் போட்டிகளில் 36 டாட் பால் வீசி இருக்கிறார். பவர்பிளே ஓவர்களில் கூட தீபக் சாஹர் ரன்களை வெகுவாக கட்டுப்படுத்துவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
ஹர்பஜன், ஜடேஜா எப்படி?
இவர்கள் தவிர்த்து ஹர்பஜன் சிங், ஜடேஜா இருவரும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த இடங்களில் இருக்கின்றனர். கடைசி ஓவர்களில் பிராவோ தான் சென்னை அணியின் ஒரே தீர்வாக இருக்கிறார்.
தோனியின் திட்டம்
சென்னை அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் சரியாக அமையாத நிலையில், அதிக சர்வதேச அனுபவமற்ற தீபக் சாஹர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். தோனி சுழற் பந்துவீச்சை மையமாக வைத்து தன் திட்டங்களை செயல்படுத்துகிறார். அதற்கு இம்ரான், ஹர்பஜன், ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இந்த திட்டம் சரியாக வேலை செய்யும் பட்சத்தில் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரை சென்னை அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.