மும்பை: மும்பையில் கிரிக்கெட் போட்டியில் 1009 ரன்கள் அடித்து சாதனை படைத்த பிரணவிற்கு மாதம் ரூபாய் 10,000 உதவித்தொகையை அளிக்க முடிவு செய்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.
மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களில் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை படைத்த பிரணவினை பலரும் பரிசு மழையால் நனைத்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பாக பிரணவுக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத் தொகை கிடைக்க உள்ளது.
இந்த மாதம் முதல் டிசம்பர் 2021 வரை பிரணவுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 10,000 வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.