3 ஆண்டுகள்
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் sky ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்தார்.
அப்போது பலரும் தினேஷ் கார்த்திக் அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்து விட்டதாகவும், அவருக்கு கிரிக்கெட்டில் இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்றும் கூறினர்.
ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் ஆர் சி பி அணியில் ஃபினிஸராக களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பினார்.இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் மிகவும் தேவைப்படும் நேரமான டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சொதப்பினார். இதனால் கடைசி இரண்டு போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஸ்டுடியோக்கு திரும்பினார்
இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முற்றிலும் இளைஞர்களை கொண்ட அணியை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.இதனால் தினேஷ் கார்த்திக், நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்படவில்லை.இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மீண்டும் தொலைக்காட்சி ஸ்டுடியோக்கு வந்து கிரிக்கெட் குறித்து பேசும் தொகுப்பாளராக மாறிவிட்டார்.
ரசிகர்கள் வேதனை
cricbuzz தளத்தில் இந்தியா நியூசிலாந்து தொடர் குறித்து பேசும் கிரிக்கெட் வர்ணனனையாளராக தினேஷ் கார்த்திக் தற்போது பணியை தொடங்கி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை கார்த்திக் வீண் அடித்து விட்டதாக வேதனை தெரிவித்தனர். எனினும் கடந்த பத்து மாதங்களில் தினேஷ் கார்த்திக் பினிஷராக இந்தியாவுக்கு நிறைய போட்டிகளை வெற்றி பெற்று தந்துள்ளது பெரும் சாதனை தான் என்றும் கூறியுள்ளனர்.