
தோனிக்கு புது பதவி
அதில் பலரின் வாய்களில் இருந்து வரும் பெயர் எம்.எஸ்.தோனி தான். அதாவது இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு அறிவிக்கலாம். அதன்பின் அவரை இந்திய அணியின் இயக்குநராக முழு நேர பதவி கொடுக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்காக தோனிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

சல்மான் யோசனை
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் புதிய யோசனையை வழங்கியுள்ளார். அதில், வி.வி.எஸ்.லக்ஷ்மண் மற்றும் விரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் மிகவும் சிறந்தவர்கள் தான். ஆனால் ஒரு பயிற்சியாளருக்கு தலைமை பண்பு மற்றும் வியூகங்கள் வகுப்பதில் அதிக அனுபவம் வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கு யோசனைக்கூற முடியும். அதற்கு தோனி தான் சரிபட்டு வருவார்.

என்ன காரணம்
எம்.எஸ்.தோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார் என்பதை பாருங்கள். எனவே அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வைக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும் என சல்மான் பட் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க தோனி சிஎஸ்கே அணிக்கும் ஆலோசகராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

வாய்ப்பு தர வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை தரவேண்டும் எனக்கூறியுள்ளார். அதில், ரிஸ்க் எடுக்காமல் எதுவே வராது. எல்லா முறையும் வெற்றி மட்டுமே வரும் என நினைக்கக்கூடாது. அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும் என சல்மான் பட் கூறியுள்ளார்.