3 ரன்களில் சதமில்லை
தொடர்ந்து ஆடிய டெல்லி அணியின் ஷிகர் தவான் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக வீசி, 97 ரன்கள் குவித்தார். 18.5 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வந்தது.
கூடுதல் ரன்கள் தேவை
இந்நிலையில், போட்டி முடிந்து தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த மைதானத்தில் இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது கிடையாது. இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க வேண்டும்.
நன்மை இல்லை
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. மேலும், க்றிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் இல்லாதது அணிக்கு நன்மை கிடையாது. அதனால் தோற்றுவிட்டோம். கில் தனது வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார்.
கடினமான ஒன்று
டென்லி அதிர்ச்சி அளிக்கும்படி துவக்கம் கொடுத்தார். ஆனாலும் அடுத்த போட்டியில் மீண்டு எழுந்து சிறப்பாக விளையாடுவார். ஈடன் மைதானத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த சற்று கடினமாக இருந்தது என்று கூறினார்.