கராச்சி: பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் நடக்க உள்ள மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள உலக லெவன் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் டுபிளாசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, 2009ல், பாகிஸ்தானுக்கு சென்றது. அப்போது, லாகூர் மைதானத்தில் இருந்து திரும்பிய இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இலங்கை வீரர்கள் ஏழு பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களைக் கூறி, இலங்கை அணி, பாதியிலேயே நாடு திரும்பியது.