
டெல்லி : சச்சினும், கங்குலியும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடியவர்கள். அவர்களது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஆரம்பித்தது. இருவருக்கும் பதினான்கு வயது முதல் அனுபவம் உண்டு. சச்சினுடன் தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார் கங்குலி.
ஒரு இணைய நிகழ்ச்சியில் பேசிய போது கங்குலி, சச்சினின் சில பழக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். “சச்சினை முதன் முறை பார்த்தபோது நீண்ட முடி வைத்துக்கொண்டு இருப்பார். பம்பாயில் இருந்து வந்தவர் என தெரிந்து கொண்டேன். அப்போதே அவர் மிகவும் பிரபலம். பேட்டிங் பயிற்சி செய்யும் இடத்தில் இருந்து அவரை விலக்க முடியாது. எப்போதும் பேட்டிங் செய்து கொண்டே இருப்பார். பயிற்சியாளர் வந்து மற்றவர்களுக்கும் சேர்த்து தான் இந்த பயிற்சி என கூறுவார். அப்போதே அவர் வித்தியாசமானவர் என்பதை தெரிந்து கொண்டேன்” என கூறினார்.
