இந்தியாவின் பயணம்
லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் படு தோல்வியடைந்தது. எனினும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றியை பெற்று 3 போட்டிகளில் 2ல் வெற்றி என பலமாக தான் இருந்தது. ஆனால் இன்றும் பெரிய அணியான இங்கிலாந்திடம் அடி வாங்கியுள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள், இங்கிலந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சரிந்தனர். 7 வீராங்கனைகள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டி அதிர்ச்சி அளித்தனர். இதில் கேப்டன் மிதாலி ராஜ் எடுத்தது ஒரு ரன் மட்டுமே ஆகும்.
மிகப்பெரிய ஏமாற்றம்
இந்திய அணி இப்படி மோசமாக தோல்வியடையப்போகிறது என்ற கவலையில் இந்திய வீராங்கனைகள் இருந்தனர். குறிப்பாக தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என ஸ்மிருதி மந்தனா சோகமாக உட்கார்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. துவண்டு விடாதீர்கள் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
பரவி வரும் புகைப்படம்
இந்தியாவின் இப்படி மோசமாக தோல்வியடையப்போகிறது என்ற கவலையில் இந்திய வீராங்கனைகள் இருந்தனர். குறிப்பாக தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என ஸ்மிருதி மந்தனா சோகமாக உட்கார்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. துவண்டு விடாதீர்கள் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.