செம பாஸ்
இந்த 2019 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது கண்டிப்பாக ஷாகிப் அல் ஹசன்தான். தனது வங்கதேசம் அணியை தனி ஆளாக வெற்றிகளை நோக்கி தொடர்ந்து நகர்த்தி சென்றவர்தான் ஷாகிப். இந்த தொடர் முழுக்க எல்லா அணிகளுக்கு எதிராகவும் இவர் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் வங்கதேசம் அணி இவரின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
செம பாஸ்
வங்கதேசம் அணியின் மொத்த அழுத்தத்தையும் இவர்தான் சுமந்து விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கு பெரிய அளவில் அழுத்தம் இருந்தது. ஆனால் அனைத்தையும் சமாளித்து இவர் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். ஒவ்வொரு போட்டியில் இவர் வெவ்வேறு இடங்களில் களமிறங்கினாலும் பார்ம் போகாமல் ஆடினார்.
மாஸ்
இந்த தொடர் முழுக்க 9 போட்டிகளில் ஆடிய இவர் 606 ரன்களை எடுத்துள்ளார். இவர்தான் லீக் போட்டிகள் நடந்த வரை இந்த தொடரில் அதிகப்பட்ச ரன்கள் எடுத்த வீரர். 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வங்கதேசம் அணியின் வெற்றிக்கு இவர்தான் பல முறை காரணமாக இருந்தார்.
ஆனால் என்ன
ஆனால் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் கடைசி நேரத்தில் இவரை முந்தினார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் விக்கெட் எடுக்கவில்லை. இவர் மட்டும்தான் விக்கெட்டும் எடுத்து, ரன்களையும் குவித்துள்ளார்.
ஐசிசி அழைப்பு
இந்தநிலையில் ஐசிசி தற்போது இவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை காண சிறப்பு அழைப்பு இவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
என்ன காரணம்
ஒருவேளை இவருக்கு ஆட்டத்திற்கான தொடர் நாயகன் விருது வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஷாகிப் அல் ஹசன் மட்டும்தான் விக்கெட்டும் எடுத்து, ரன்களையும் குவித்துள்ளார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படலாம் என்கிறார்கள்.