என்ன
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. வரிசையாக 100 ரன்களை அடிப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் என்ன
ஆனால் அதன்பின் ஸ்மித் மற்றும் நாதன் நைல் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி பிழைத்தது. இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. நாதன் நைல் மொத்தம் 92 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது.
குறி வைக்கப்பட்டனர்
ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் இறங்கியதில் இருந்தே, அம்பயர்கள் தொடர்ந்து தவறான தீர்ப்புகளை வழங்கி வந்தனர். மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஹோல்டருக்கு இரண்டு முறை தவறான விக்கெட் கொடுக்கப்பட்டது. அதன்பின் கிறிஸ் கெயிலுக்கு இரண்டு முறை தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
முக்கியம்
முக்கியமாக கெயிலுக்கு முதலில் பேட்டில் படாமலே கேட்ச் விக்கெட் கொடுக்கப்பட்டது. அதன்பின் தவறான எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டையும் ரிவ்யூ மூலம் தவறு என்று நிரூபித்தார் கெயில். அதற்கு அடுத்து 5 வது ஓவரில் ஸ்டார்க் போட்ட நோ பாலில் அம்பயர் நோ பால் கொடுக்க தவறினார். ஆனால் அதற்கு அடுத்த பாலே கெயில் ஸ்டார்க பந்தில் கெயில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் சரியாக அம்பயர் முதல் பால் நோ பால் கொடுத்து இருந்தால், கெயில் அதற்கு அடுத்த பந்தில் (ஃபிரி ஹிட்) அவுட் ஆகி இருக்க மாட்டார்.
மோசம்
அம்பயர்களின் இந்த தவறான முடிவுகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏன் இப்படி மோசமாக அம்பயர் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் பாரபட்சமாக செயல்பட்டுள்ளனர். இதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது என்று பலர் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் இது மேற்கு தீவுகளுக்கு எதிராக மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.
என்ன சொல்கிறார்
இதற்கு எதிராக கருத்து கூறியுள்ள மேற்கு இந்திய தீவுகள் வீரர் பொல்லார்ட், ஐசிசி இதுபோன்று தவறாக தீர்ப்பு வழங்கும் அம்பயர்களை உடனே நீக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இனியும் நாம் தாமதம் செய்ய கூடாது, என்று மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.