கேப்டன்சி விவகாரம்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, மோசமாக வெளியேறியது. இதனையடுத்து ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலக பிசிசிஐ அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. ஏனென்றால் 35 வயதாகும் ரோகித், இனி 3 வடிவ கிரிக்கெட்டையும் பார்க்க முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த டி20 கேப்டனாக அறிவிக்க முடிவெடுத்துள்ளனர். இதற்கான சோதனை முயற்சி தான் நியூசிலாந்து தொடர்.
சஞ்சு சாம்சன் விவகாரம்
இந்நிலையில் கேப்டன்சியில் தோனியை வெளிப்படுத்தியுள்ளார் பாண்ட்யா. செய்தியாளர் சந்திப்பின் போது சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை எனக்கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சஞ்சுவுக்கு தெரியும், தனிப்பட்ட காரணங்களால் அவரை ஒதுக்கவில்லை. சூழலுக்கு ஏற்ப தான் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய முடியும். நான் வீரர்களின் கேப்டனாக இருக்க தான் விரும்புகிறேன்.
வீரர்களின் கேப்டன் நான்
எனது உதவி தேவை என இந்திய அணியில் யார் நினைத்தாலும், நான் உடனே சென்று நிற்பேன். வீரர்கள் அனைவருக்குமே தெரியும், எனது அறையின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும். ஏதாவது பேசவேண்டும் என்றால், நேரடியாக என்னிடம் வந்து கலந்து பேசலாம். ஏனென்றால் அவர்களின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரியும். அனைவருக்கும் நான் சமமானவன் எனக்கூறினார்.
தோனியின் ஸ்டைல்
இது முற்றிலும் தோனியின் வசனம் ஆகும். தோனி கேப்டனாக இருந்த போதும், பெரும்பாலும் தனது அறையின் கதவுகளை மூடி வைக்க மாட்டார். வீரர்கள் தன்னிடம் வந்து நேரத்தை செலவளிக்க அவர் விரும்புவார். வீரர்களின் கேப்டனாக அவர் இருந்தார். அதே போன்று தான் தற்போது ஹர்திக் பாண்ட்யாவும் கூறியிருக்கிறார். இதனால் அவரை காப்பி அடிக்கிறாரா? என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அஸ்வின் பாராட்டு
இதுகுறித்து அஸ்வினும் பேசியிருக்கிறார். அதில், தல தோனியின் ஸ்டைலை பயன்படுத்த வேண்டும் என ஹர்திக் பாண்ட்யா நினைத்தாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் தோனியும் இப்படி தான் கூறுவார். தோனியும் பாண்ட்யாவும் மிகவும் நெருங்கியவர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். முக்கிய கேள்விகளை சரியாக பதில் கொடுத்து அசத்துகிறார். பாராட்டியே ஆக வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.