186 ரன்கள்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் 19 பந்துகளில் கேமிரான் கிரின் அரைசதம் விளாசினார். பெரிய ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் பட்டேல், சாஹல் ஆகியோர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தனர். இறதியில் டிம் டேவிட் அரைசதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
30 ரன்களுக்கு 2 விக்கெட்
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் வெளியேற, இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. அப்போது களத்தில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டியது.
கோலி அதிரடி
விராட் கோலி கவுண்டர் அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஹேசல்வுட் வீசிய பந்தை சிக்சருக்கும், ஆடம் சாம்பா பந்தையும் சிக்சருக்கு கோலி விரட்டினார். மறுமுனையில் நின்று கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.
தொடரை வென்றது இந்தியா
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 36 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் 69 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலி 38 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 8வது அரைசதத்தை அடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்து மறு பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்து டாட் பாலாக ஆனது. இதனால் கடைசி 2 பந்தில், 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட ஹர்திக் பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.