
டாஸ்
சென்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோஹ்லி, தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதே டீம்
இந்திய அணி இந்த முறையும் அதே அணியுடன் களம் இறங்கியது. முக்கியமாக ஸ்பின் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் சென்ற முறை செஞ்சுரி அடித்த டியூ பிளசிஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிவிட்டார்.
கலக்கல்
இந்திய பவுலிங் கலக்கல் கலாசலாவாக இருந்தது. முக்கியமாக சாஹல் முதல்முறையாக 22 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். இதுதான் இவரது சிறந்த பவுலிங் ஆகும். அதேபோல் குல்தீப் யாதவ் 20 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பும்ரா, புவனேஷ்வர்குமார் தலா ஒருவிக்கேட் எடுத்தனர்.

சுருண்டது
இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 32.2 ஓவரில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. யாருமே 25 ரன்களை தாண்டவில்லை.

பேட்டிங்
இந்த நிலையில் இந்தியா பேட்டிங் இறங்கிய தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. ரோஹித் சர்மா ஆரபத்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன்பின் இந்தியா அதிரடியாக ஆடியது. இதனால் 1 விக்கெட் இழப்பிற்கு 20.3 ஓவரில் எளிதாக 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications
