ஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸா அடிச்சு தள்ள.. கிறிஸ் கெயில் சொன்ன அந்த ரகசியம் தான் காரணம்!
Recommended Video
கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸ்ஸல்-ஐ கண்டு அனைத்து அணிகளும் மெர்சல் ஆகி உள்ளனர்.
அந்த அளவு போட்டிக்கு போட்டி அதிரடியாக ரன் குவிக்கும் வேகத்தை கூட்டி வருகிறார். முதல் எட்டு போட்டிகளில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரஸ்ஸல்.

என்ன காரணம்?
மற்ற வீரர்களைக் காட்டிலும் அதிக சிக்ஸர் என்பதோடு, சேஸிங் செய்யும் போது எத்தனை ரன்கள் இலக்கு இருந்தாலும், சிறிதும் அசராமல் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் செல்கிறார் ரஸ்ஸல். இதற்கு என்ன காரணம்?

அந்த ரகசியம்
அதிரடி சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் சொன்ன ஒரு ரகசியம் தான் ஆண்ட்ரே ரஸ்ஸல்-ஐயும் அதிரடி வீரராக மாற்றி உள்ளது. 2016 டி20 உலகக்கோப்பை தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கிறிஸ் கெயில், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆடி வந்தனர்.

பேட்டில் மாற்றம்
அப்போது, கெயில், ரஸ்ஸலிடம், அதிக எடை கொண்ட பேட் பயன்படுத்துமாறு கூறி இருக்கிறார். அதை பயன்படுத்தும் அளவுக்கு உனக்கு வலு இருக்கிறது எனவும் கூறி இருக்கிறார். அதை அப்படியே பின்பற்றிய ரஸ்ஸல், டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் 43 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.

ரன் குவிப்பு
அதன் பின் தன் அதிக எடை கொண்ட பேட்டை சிறிது, சிறிதாக மாற்றி வடிவமைத்து தற்போது கிறிஸ் கெயிலுக்கு இணையான அதிரடி மன்னனாக வலம் வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 377 ரன்கள் குவித்துள்ளார் ரஸ்ஸல்.


Click it and Unblock the Notifications