ப்ளே ஆஃப் சுற்று
அதாவது தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் 18 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ரன்ரேட் அடிப்படையில் இவை முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 4வது இடம் மட்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கடும் போட்டி
டூப்ளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி தற்போது வரை 16 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து வருகிறது. டெல்லி அனியும் 14 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு மீதம் ஒரு போட்டி இருப்பதால், அதன் முடிவை பொறுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அது மும்பை அணியின் கையில் தான் உள்ளது.
கைவிரித்த ரோகித்
இந்நிலையில் ஆர்சிபி அணியை ரோகித் சர்மா கைவிட்டுள்ளார். அதாவது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பல வீரர்களை கழட்டிவிட்டுள்ளார். இதுவரை அந்த அணி 13 போட்டிகளில் 22 வீரர்களை பயன்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியிலும் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, உள்ளிட்டோரை நீக்க முடிவு செய்துள்ளார்.
முக்கிய வீரர்கள் இல்லை
ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் இல்லை, தற்போது பொல்லார்ட், பும்ராவை நீக்கிவிட்டு, அவர்களின் இடத்திற்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கரை கொண்டு வர முடிவெடுத்துள்ளனர். ரிலே மெரிடித்தையும் நீக்க முடிவெடுத்துள்ளனர். இது டெல்லி அணிக்கு பெரிய சாதகமாக அமையும்.
Recommended Video
மும்பை அணி
ரோகித் சர்மா, இஷான் கிஷான், டேனியல் சாம்ஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், ராமந்தீப் சிங், சஞ்சய் யாதவ், ஜஸ்பிரித் புர்மா, மயங்க் மார்கண்டே