
ஆஸ்திரேலிய டி20 தொடர்
இந்த டி20 போட்டிகள் குறித்த செய்திகளை உடனடியாக வழங்குவதற்காக செய்தி ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்தவகையில் இந்தி ஊடகம் ஒன்று, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஓப்பனிங் விளையாடுவார் என்று செய்தி வெளியிட்டதால் ரசிகர்களுக்கு திடீர் குழப்பம் ஏற்பட்டது.

ரோகித்தின் பேச்சு
ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசுவதற்காக சமீபத்தில் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் தான் ஓப்பனராக செயல்படுவார் எனக்கூறினார். மேலும் விராட் கோலி சில சமயங்களில் ஓப்பனிங் விளையாட வாய்ப்புள்ளது எனக்கூறினார்.

வீடியோ
இந்த தகவலை வேகமாக மக்களுக்கு தெரியப்படுத்த நினைத்த அந்த செய்தி ஊடகம், நேரலையிலேயே தவறுதலாக ராகுல் காந்தி ஓப்பனிங் வீரர் எனக்கூறினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் திட்டம்
இதுஒருபுறம் இருக்க, இந்திய அணி இன்று முதல் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் களமிறங்குகிறது. ஆசிய கோப்பையில் பேட்டிங் சரியாக அமைந்த போதிலும் பந்துவீச்சு சற்று மோசமாக அமைந்தது. எனவே இந்த முறை பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் வந்துள்ளதால், புதிய மாற்றத்தை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications