50
பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய கே.எல்.ராகுல் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். வெறும் 14 பந்துகளில் இவர் 51 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாதனை
இதற்கு முன்பாக ஐபிஎல் போட்டியில் வார்னர் 2017ல் 4.1 ஓவரில் அரைசதம் அடித்தார். 4.2 கில்கிறிஸ்ட் 2009 அரைசதம் அடித்தார். 4.2 ஓவரில் ரெய்னா 2014ல் அரைசதம் அடித்தார். 4.6 ஓவரில் கெயில் 2013 அரைசதம் அடித்தார். தற்போது ராகுல் 2.5 ஓவரில் அரைசதம் அடித்துள்ளார்.

சும்மாவா
இதற்கு முன் ராகுல் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அவரை அந்த அணி இந்த முறை எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக 11 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டதை ராகுல் திருப்தி செய்துள்ளார்.

அவுட்
இந்த நிலையில் இவர் வேகமாக சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 51 ரன்கள் எடுத்து இருந்த போது இவர் விக்கெட்டை இழந்தார். ஷமி பந்தில் போல்டிடம் கேட்ச் கொடுத்து இவர் விக்கெட்டை இழந்தார்.


Click it and Unblock the Notifications
