|
தமிழில் பேசினார்
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த போது முரளி விஜய் தமிழில் பேசி இருக்கிறார். அப்போது அவர் கே.எல் ராகுலிடம் ''மச்சான் இந்த ஓவர்ல எல்லா பாலும் உள்ளதான் போடுறான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி இருக்கிறது.
|
வைரல் ஆனது
இதை அடுத்து அனைத்து கிரிக்கெட் தளங்களும் இந்த வீடியோவை வெளியிட தொடங்கின. பலரும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டனர். இதற்காக நிறைய பேர் அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார்கள்.
|
ராகுல் தமிழ்
இந்த போட்டியில் விஜய், லோகேஷ் ராகுலிடம் தமிழில் பேசினார். இதனால் அவருக்கு தமிழ் தெரியுமா என்று பலரும் கேட்டு இருக்கிறார்கள். ராகுல் சில காலம் சென்னையில் இருந்ததாலும், ஹைதராபாத் அணிக்காக விளையாடியதாலும் நன்றாக தமிழ் பேசுவார்.
|
இந்தில பேசுங்க
ஆனால் சிலர் இதை வைத்தும் பிரச்சனை செய்து இருக்கிறார்கள். ''அவர்கள் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழில் பேச வெட்கமாக இல்லை. அவர்கள் இந்தியில் பேச வேண்டும்'' என்று குறிப்பிட்டு சண்டையிட்டு இருக்கிறார்கள்.