
சென்சூரியன்: கேப்டன் விராட் கோஹ்லி சூறாவளியாக மாறி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவிக்க, இந்தியா 5-1 என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது.
