பேட் செய்ய வராத இலங்கை
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மற்றும் அம்பயர்கள் களத்திற்கு வந்த பின்னரும் இலங்கை வீரர்கள் யாரும் களத்திற்கு வரவில்லை. இதற்குக் காரணம், அம்பயர்கள் மூன்றாவது நாள் காலை பந்தை மாற்றியதால் இலங்கை வீரர்கள் யாரும் களத்திற்கு வரவில்லை.
பந்தை மாற்றியதால்
நீண்ட வாக்குவாதங்களுக்கு பிறகு இலங்கை அணி களமிறங்கி விளையாடத் தொடங்கியது. இலங்கை வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் களத்திற்கு வராததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்பட்டது
பந்தை மாற்றியது ஏன்
உண்மையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்தான் புதிய பந்தைத் தேர்வு செய்தனர். ஐசிசி விதி 41.3 ன்படி புதிய பந்தை தேர்வு செய்தனர். ஆனால் இதை இலங்கைத் தரப்பு ஏற்கவில்லை.
|
திடீர்னு மாற்றினால் எப்படி
இலங்கை அணி தரப்பில் கூறியதாவது , பந்து மாற்றுவது குறித்து நடுவர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தெரிவித்ததாகவும் மற்றும் அதற்கான போதிய வீடியோ ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் கூறினர்.