நிறுத்தி வைப்பு
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டிருந்த டி20 மினி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில்தான் இந்தத் தொடர் திட்டமிடப்பட்டது.
நேரம் சரியில்லை
ஆனால் அமெரிக்க நேரமும், இந்திய நேரமும் மாறுபடுவது பெரும் இடையூறாக மாறியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் இரவு 7 மணி முதல் இரவு 11.30 மணி வரை பார்ப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் போட்டிகளை நடத்தினால் அந்த நேரம் முற்றிலும் மாறுபடுகிறது.
ஈஸ்ட் கோஸ்ட்
அமெரிக்காவின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் இந்திய நேரத்திற்கு கிட்டத்தட்ட சமமான அளவில் இருக்கும் என்கிறார்கள். அதுகுறித்துப் பரிசீலித்து வருகிறோம். அது சரிப்பட்டு வரும்பட்சத்தில் முடிவுகள் அதற்கேற்ப எடுக்கப்படும்.
வர்த்தகம் பாதிக்கும்
அமெரிக்காவில் பகலில் போட்டியை நடத்தினால் இந்தியாவில் ரசிகர்களால் சரிவர பார்க்க முடியாது. நமக்கு ரசிகர்கள் முக்கியம், டிவி ஒளிபரப்பு முக்கியம். எனவே அதை புறக்கணித்து விட்டு போட்டியை நடத்த முடியாது.
சாதகமான ஊரைத் தேடுகிறோம்
எனவே அமெரிக்காவில் எந்த மாகாணத்தில் போட்டியை நடத்தினால் சாதகமாக இருக்கும் என்பது குறித்து ஆராயப்படும். அதுவரை போட்டித் தொடர் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார் தாக்கூர்.
வருடா வருடம்
வருடா வருடம் செப்டம்பர் மாதத்தில் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று முன்பு பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்தத் தொடர் அமெரிக்காவில் நடத்தப்படும் என்றும் அது கூறியிருந்தது. தற்போது நேர குழப்பம் காரணமாக தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.