
யார் ராணா
தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ராணா, டெல்லியை சேர்ந்தவர். 2016ல் அறிமுகமான இவர் அப்போதில் இருந்து கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். இவருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. சென்ற ஐபிஎல் தொடரில் இவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே போட்டார். நேற்று நடந்த போட்டியிலும் ஒரே ஒரு ஓவர் போட்டார்.

இரண்டு
ஆனால் இவர் போட்ட ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். முதலில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி துள்ளி குதித்தார். அதே ஓவரில் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்த கோஹ்லி விக்கெட்டையும் எடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

திட்டினார்
அவர் கோஹ்லி விக்கெட்டை எடுத்த போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். உடனே கோஹ்லியை பார்த்து கோபமாக கத்தினார். எப்போதும் கோபமாக செயல்படும் கோஹ்லியே அதைப்பார்த்து அமைதியாக சென்றார். ஆனால் கோஹ்லியின் முகத்தில், இளம் வீரர் ஒருவர் அவமானப்படுத்திய சோகம் தெரிந்தது.

கோஹ்லி மனசு
ஆனால் கோஹ்லி இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளவில்லை. கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய வந்த போது, பெங்களூர் வீரர் குல்வந்த் ஓவரில் நிதிஷ் ராணா சிக்ஸ் ஒன்று அடித்தார். இந்த சிக்ஸ் மைதானத்தில் கடைசி இடத்தில் இருந்த ரசிகர்களிடம் சென்று விழுந்தது. இதை பார்த்து கோஹ்லி ஆச்சர்யப்பட்டு கைதட்டினார். கோஹ்லியின் இந்த செயலை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
