வீரர்கள்
கிரிக்கெட் உலகில் மொத்தம் 'ஏ+, ஏ, பி, சி' நான்கு விதமான வீரர்கள் இருக்கிறார்கள். இதில் ஏ+ வீரர்கள் மிகவும் அதிக அளவில் சம்பளம் வாங்குவார்கள். டோணி, கோஹ்லி, ரோஹித், அஸ்வின் போன்ற முக்கியமான வீரர்கள் மட்டும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். அனுபவத்தையும், விளையாட்டையும் பொறுத்து இந்த கிரேட் மாற்றப்படும்.
டோணி நீக்கப்பட்டார்
இவ்வளவு நாள் ஏ+ வீரராக இருந்து வந்த டோணி தற்போது அந்த கிரேடில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இனி இவர் ஏ கிரேட் வீரர் மட்டுமே என்று கூறப்பட்டு இருக்கிறது. நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இவரது சம்பளமும் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
காரணம் என்ன
இவரது விளையாட்டு திறமையில் எந்த வித பிரச்சனையும் இல்லை. மாறாக ஏ+ கிரேட் எடுப்பதற்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். மாறாக டோணி டெஸ்ட் போட்டியில் ஒய்வு பெற்றும் ஏ+ கிரேடில் விளையாடி வந்தார். தற்போது சில வீரர்களின் அழுத்தத்தின் காரணமாக அவர் ஏ+ கிரேடில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அஸ்வின்
இதேபோல் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதில்லை. ஆனால் அவர்கள் இந்திய அணியின் ''ரொட்டேஷன் பாலிசி'' காரணமாகவே விளையாடாமல் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் ஏ+ கிரேடில் தொடர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.