பாதிக்கப்படும் விளையாட்டு
இந்தியாவும், பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல மகாமகங்கள் ஆகிறது. அவ்வளவு ஏன் கிரிக்கெட்டில் மட்டும் இந்த நிலைமை கிடையாது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெளியேறியது. பாகிஸ்தான் ஹாக்கி அணியும் கூட இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இருந்து வெளியேறியது.
அரசியல் காரணங்கள்
இந்திய அணியில் இஷாந்த் சர்மாவை தவிர வேறு எந்த வீரரும் பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையடவில்லை. இதே போல் பாகிஸ்தான் அணியிலும் இப்போது இருக்கும் வீரர்கள் யாரும் இந்திய அணியுடன் விளையாடியது இல்லை.அரசியல் காரணங்களால் ஒரு தலைமுறையே, ஒரு நாட்டுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
பிசிசிஐ நிராகரிப்பு
இந்த நிலையில் தான் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை இங்கிலாநதில் வைத்து நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன் வந்தது. ஆனால் இந்த கோல்டன் வாய்ப்பை பிசிசிஐ நிராகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ, மத்திய அரசு அனுமதி தராத வரையில், பாகிஸ்தானுடன் இருத்தரப்பு போட்டிக்கு வாய்ப்பே இல்லை. என்று தெரிவித்துள்ளது.
உலககோப்பைக்கு ஆபத்து
இப்போது பெரிய பிரச்சினையே, அடுத்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணியினர் இந்தியா வர மாட்டோம் என்று கூறினாலோ இல்லை, மத்திய அரசு பாகிஸ்தானுக்கு விசா கொடுக்காமல் மறுத்துவிட்டாலோ, பெரிய பிரச்சினையே ஏற்படும். இதே போன்று 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், அதிலிருந்து இந்தியா விலகவும் வாய்ப்பு உள்ளது.