எப்படி
இந்த நிலையில் இந்திய அணியில் ராகுல் திவாதியா எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது. இவரை எல்லாம் அணியில் எடுத்தது ஏன்? ஐபிஎல் ஆடினால் அவர் பெரிய வீரரா என்று பலரும் இவருக்கு எதிராக கேள்வி எழுப்பி இருந்தனர்.
விமர்சனம்
இவரின் அணி தேர்வை விமர்சனம் செய்து இருந்தனர். பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் இவர் அதிரடியாக ஆடினார். தோனி ஸ்டைலில் முதலில் மெதுவாக ஆடிவிட்டு பின் அதிரடியாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார். இதுதான் இவர் பிரபலமாக காரணம்.
பதிலடி
ஆனால் இதை பார்த்து எல்லாம் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தற்போது திவாதியா பதிலடி கொடுத்துள்ளார். ஹரியானா அணிக்காக விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஆடி வரும் திவாதியா அதிரடியாக ஆடி 39 பந்தில் 73 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிரடி ஆட்டம்
இதில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்துள்ளார். தான் ஒரு டி 20 வீரர் என்பதை தனது அதிரடி மூலம் ராகுல் திவாதியா நிரூபித்து இருக்கிறார். நான் இன்னும் பார்மில் இருக்கிறேன். ஒரு போட்டியில் மட்டும் நான் நன்றாக ஆடவில்லை.
வாய்ப்பு
நான் தொடர்ந்து நன்றாக ஆடுகிறேன் என்று திவாதியா நிரூபித்துள்ளார். இவர் நல்ல ஸ்பின் பவுலரும் கூட. இதனால் இந்திய அணியில் இவரின் ஆல் ரவுண்டர் திறமைக்காக வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.